சமூக பணி அபிவிருத்தி தேசிய நிறுவகம் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வழங்குகின்ற சேவைகளைப் பலப்படுத்துவதற்கு ஒரு விடுதியை ஸ்தாபித்ததன் ஊடாக அதன் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. மொத்த பயனாளிகளாக 24 பெண்களுக்கு வருடம் முழுவதும் தங்குமிட வசதி வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுதி நிறுவகத்திலிருந்து 15 மைல் தொலைவில் களனிய, பொல்ஹேன என்ற இடத்தில் அமைந்துள்ளது.

தெரிவுசெய்யும் அளவுகோலுக்கு முதல் வருட மற்றும் இறுதி வருட பட்டப்படிப்பு மாணவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படுகிறது. அத்துடன் வினைத்திறன்மிக்க முகாமைத்துவத்திற்காக ஒரு நிரந்தர பாதுகாவலர் நியமிக்கப்பட்டுள்ளார். விடுதியின் செயற்பாட்டை மேர்பார்வைசெய்வதற்கு  பணிப்பாளர் நாயகம், மேலதிக பணிப்பாளர் நாயகம் (கல்வி), பணிப்பாளர் நிதி, நிர்வாகம், பணிப்பாளர் சமூக பணி பாடசாலை, நிகழ்ச்சித்திட்ட அலுவலர், இணைப்பாளர், உதவி இணைப்பாளர் ஆகியோருக்கு மேலதிகமாக  ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு அவர்களின் கற்கையை வினைத்திறன்மிக்க வகையில் மேற்கொள்ளுவதற்கு பயனுள்ள ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் நிகழ்வுகள்